Wednesday, January 19, 2011

**** சிம்பிள் தக்காளி ரசம் ****

                                       


 தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த தக்காளி                 _     4
 மஞ்சள்த்தூள்                                   _     1 தேக்கரண்டி
 மல்லித்தழை                                   _     சிறிதளவு
 *** பொடித்து கொள்ள ***
 மிளகு                            _    ஒரு ஸ்பூன்
சீரகம்                              _     அரை ஸ்பூன் 
 காய்ந்த மிளகாய்      _     3
 பூண்டு                            _     5 பல்

 *** தாளிக்க ***
எண்ணெய்                    _    மூன்று தேக்கரண்டி
கடுகு                                _    ஒரு ஸ்பூன்  
கறிவேப்பிலை            _     ஒரு கொத்து
 பெருங்காயம்              _     சிறிதளவு

 *** செய்முறை ***
 தக்காளியை நன்கு கழுவி விட்டு,இரண்டாக அரிந்து நன்கு தாராளமாக தண்ணீர் சேர்த்து மஞ்சள்த்தூளும் சேர்த்து வேகவிடவும்.

 வெந்ததும் ஆறவிட்டு நன்கு இரண்டு டம்ளர் தண்ணீரை ஊற்றி இரண்டு மூன்று முறை என கரைத்து சக்கையை ஓரளவிற்க்கு நீக்கி விடவும்.(புளிப்பு தன்மை இருக்கும் அளவிற்க்கு பார்த்து கொள்ள வேண்டும்.)
 அதன் பின் பொடிக்க கொடுத்தவைகளை நன்கு நசுக்கி அதில் சேர்க்கவும்.தேவையான உப்பும் போட்டு கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தாளிக்க கொடுத்தவைகளை கொண்டு தாளித்து ரச கரைசலை ஊற்றி மல்லிதழையை நறுக்கி சேர்த்து இரண்டு முன்று கொதி கொதிக்க விட்டு இறக்கவும்.சுவையான சுலபமான ரசம் தயார்.








அன்புடன், 
அப்சரா.

2 comments:

ஆமினா said...

ரொம்ப சிம்பிளா பாக்கவே அழகா இருக்கு அப்சரா

apsara-illam said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஆமினா...,கருத்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி ஆமினா...

அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out