சிக்கன் _ 1/2 கிலோ
பாஸ்மதி அரிசி _ 2 டம்ளர்(அல்லது) அரைபடி
வெங்காயம் _ 2
தக்காளி _ 2
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது _ 2 தேக்கரண்டி
தயிர் _ 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் _ 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1 1/2 தேக்கரண்டி
பிரியாணி மசாலா _ 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாத்தூள் _ 1 தேக்கரண்டி
பட்டை _ விரல் அளவு 2
ஏலக்காய் _ 2
கிராம்பு _ 2
பிரிஞ்சி இலை(பே லீஃப்) _ சிறியதாக ஒன்று
எண்ணெய் _ 100 மிலி
நெய் _ ஒரு தேக்கரண்டி
மல்லி,புதினா தழை _ தலா அரை கட்டு
எலுமிச்சை பழம் _ ஒன்று
*** செய்முறை ***
சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு மஞ்சள் தூள் சிறிது சேர்த்து நன்கு மூன்று, நான்கு கழுவி விட்டு தண்ணீரை வடிக்கட்டி விட்டு அதனுடன் தயிரையும் ஒரு தேக்கரண்டி உப்பையும் சேர்த்து நன்கு பிரட்டி வைத்து கொள்ளவும்.
வெங்காயம் தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்து கொள்ளவும்.பச்சைமிளகாயையும் கீறி வைத்து கொள்ளவும்.புதினா.மல்லி தழைகளையும் ஆய்ந்து தண்ணியில் போட்டு வைத்து கொள்ளவும்.
ஒரு அகன்ற வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை,கிராம்பு,ஏலக்காய்,பிரிஞ்சி இலை போட்டு தாளித்து பின் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வதங்கிய பின்,மஞ்சள்த்தூள்,மிளகாய்த்தூள்,பிரியாணி மசாலாத்தூள்(பிரியாணி மசாலாவிற்க்கு பதில் அதே அளவில் கரம் மசாலாவையே சேர்த்து கொள்ளலாம்..)எல்லாம் சேர்த்து இரண்டு நிமிடம் வதங்கி விட்டு பிரட்டி வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கிளறி விட்டு பின் நறுக்கி அலசி வைத்திருக்கும் மல்லி,புதினா தழையில் பாதியையும் உப்பு சரி பார்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி மூடி போட்டு மிதமான தீயிலேயே வேக விடவும்.
பதினைந்து நிமிடத்தில் நன்கு வெந்து மசாலாவோடு பிரண்டு இருக்கும்.அதன் பின் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
அரிசியை கழுவி ஊற வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் நான்கு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
கொதிக்கும் போது அரிசியை தண்ணீரில்லாமல் வடிக்கட்டி அதில் போட்டு சாதத்திற்க்கு தேவையான உப்பும் சேர்த்து மல்லி ,புதினா தழையில் சிறிதும் சேர்த்து எலுமிச்சை பழம் பிழிந்து வேக விடவும்.( பெரிய பழமாக இருந்தால் புளிப்பு அதிகம் பிடிக்காதவர்கள் பாதியே பிழிந்தால் போதும்)
தண்ணீர் சுண்டுகின்ற நேரம் அடுப்பை சிம்மில் வைத்து கொண்டு சிக்கன் மசாலாவை அதில் சேர்த்து அடி சாதத்தை மேலே கொண்டு பரப்பி அதன் மேல் கரம் மசாலாத்தூளை தூவி ஃபுட் கலரை ஒரு பக்கமாக போட்டு மீதியிருக்கும் நறுக்கிய மல்லி,புதினா தழையையும் தூவி நெய்யை ஊற்றி மூடியில் அலுமினிய ஃபாயிலை போட்டு மூடி அடுப்பில் ஒரு இரும்பு தோசை தவாவையோ.தம் பொடும் ப்ளேட்டையோ போட்டு அதன் மேல் சட்டியை வைத்து மூடியின் மேல் நல்ல வெய்ட் உள்ள பாத்திரம் வைத்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வைக்கவும்.
பத்து நிமிடம் கழிந்ததும்,மூடியை திறந்து ஒரு பிரட்டு பிரட்டி விட்டு மறுபடியும் மூடி ஐந்து நிமிடம் வைத்து அடுப்பை அணைத்து மூடியை திறக்காமல் அப்படியே விட்டு விடவும்.
சுவையான சிக்கன் பிரியாணி ரெடி...
அன்புடன்,
அப்சரா.