Saturday, November 5, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வலைப்பூவில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இஸ்லாமியர்களின் மிக பெரிய மற்றும் இறுதி கடமையான ஹஜ் கடமையினை இந்த வருடம் நிறைவேற்ற சென்றிருக்கும் அனைவருடைய ஹஜ்ஜையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு,அவர்களின் முன் பின் பாவங்களை போக்கிடுவானாக என நாம் அனைவரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
அதே போல் நாம் அனைவருக்கும் இக்கடமையை இனிதே நிறைவேற்ற கூடிய பாக்கியத்தினை இறைவன் அருள வேண்டும் என நிய்யத்தோடு துஆ செய்வோமாக....

Wednesday, November 2, 2011

எங்கள் வீட்டின் கை வண்ணம்



எனது இல்லத்தில் இதற்க்கு முன் எனது கைவண்ணம் என்று சில எனக்கும் தெரிந்தவற்றில் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.அப்பகுதியிலேயே எனது மாமியார் நிறைய விஷயங்களை கற்றறிந்தவர் அவரது திறமைகளையும் இங்கே வெளீயிடுவதாக சொல்லியிருந்தேன்...சரி சரி எதற்க்கு இத்தனை ஃப்ளாஷ்பேக் மேட்டருக்கு வா என்கின்றீர்களா...?அதாங்க.... இங்க தாங்க மேட்டரே.... எனது மாமியார் நிறைய கைவேலப்பாடுகள் செய்வதில் சகலகலா வல்லவர்.தனக்கு தெரிந்தவைகள் என்று மட்டுமல்லாது புதுமையாக பார்ப்பவற்றையும் தெரிந்து கொண்டு செயல்பட முனைபவர்.
இதற்க்கென்று மெனக்கெட்டு வாங்கி வந்து செய்வது என்று ஆரம்பிக்க மாட்டார்.ஏதேனும் வேஸ்ட் பொருட்களோ,உடைந்த பொருட்களோ கையில் அகப்பட்டால் அவ்வளவுதான் அவருக்கு டிங்.... என்று ஒரு மணி அடிக்க என்னவெல்லாம் இதில் செய்யலாம் என்று பல யோசனைகள் பிறக்கும். 
அப்படி செய்த விஷயங்கள் நிறைய உண்டு.அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்தேன்.




இந்த பூக்கள் கொத்து செய்தது எப்படி தெரியுமோ...?ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..?அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..?அதையெல்லாம் சேகரித்து வைத்து தான் அதில் இந்த ரோஸ்,அதற்க்கான இலைகள் எல்லாம் செய்து அதனை கலரிட்டு வைப்பார்கள்.அந்த பூங்கொத்தின் கீழே ஃப்ளவர் வாஷ் எதனால் உருவானதென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களை சுற்றி வரும் தெர்மோகோல் மூலம் செய்ததாக்கும். ஏனோ ஃபோட்டோவை சரியாக என்னால் எடுக்க முடியவில்லை.நேரில் இது இன்னும் அழகாக இருக்கின்றது.
இது மட்டுமல்லாது,தையல் வேலைகளிலும் நன்கு சிறந்தவர்.தலையணையை கூட மீன் வடிவத்தில்,ஹார்ட் வடிவத்தில் என தைத்திருப்பார்.குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.அது தற்போது கைவசம் இல்லாததால் இங்கே வெளியிட முடியவில்லை.முடிந்த போது அதை இங்கே சேர்த்து விடுகிறேன்.சரி அடுத்தது என்ன என்று பார்ப்போமா...?
இவைகள் எங்கள் வீட்டில் அலங்கரிக்கபட்டிருப்பவைகள்.
இது ஒரு மரப்பலகையை கொண்டு செய்திருப்பது என்று ஓரளவு கனித்திருப்பீர்கள்.அதன் ஓரங்களில் இருப்பது என்ன தெரியுமோ...?தானிய வகைகள்.அரிசி,பச்சைபயிர்,வெள்ளை ,மற்றும் கறுப்புஉளுந்து,கேழ்வரகு,சீரகம்,மிளகு,கடுகு,கோதுமை,தனியா,கிராம்பு,எள் இவைகளை கொண்டு அலங்கரித்ததாகும்.இதனை எனது சிறிய நாத்தினாரும்,அவள் கஸினும் படித்து கொண்டிருக்கும் போது சேர்ந்து செய்தது.நடுவில் இருக்கும் ஃபோட்டோ எனது மகளுடையது.மேலே கண்ணாடியை கொண்டு கூட ஃப்ரேம் செய்யவில்லை.ஆனாலும் அப்படியே அழகாக சுவரில் இன்னும் காட்சி அளிக்கின்றது.அவர்கள் செய்த மற்றுமொரு கைவண்ணம் தான் கீழே நீங்கள் பார்க்கும் அழகிய வீடு.

இது ஐஸ் குச்சியினால் செய்த வீடாகும்.இதை இன்னும் அழகுபடுத்தியிருந்தார்கள்.அவை எல்லாம் கொஞ்சம் விழுந்துவிட்டது.இது போன்று இன்னும் பல கைவண்ணங்கள் எங்கள் வீட்டின் ஆங்காங்கே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை மற்றுமொரு பகுதியினில்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.

*** நன்றி ***


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out