Tuesday, November 5, 2013

ப்ரவுன் ரைஸ்,உளுந்து அடை


தேவையான பொருட்கள்

உளுந்து.     - 2 கப்
ப்ரவுன் ரைஸ் - 3/4 கப்
முட்டை -  1
உப்பு.      -   தேவையான அளவு
எண்ணெய்(அ)நெய் - சுடுவதற்கு

செய்முறை


உளுந்தையும்,அரிசியையும் தனி தனியே குறைந்தது 2 அல்லது 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
பிறகு இரண்டையும் நன்கு கழுவி விட்டு கிரைண்டரில் முதலில் அரிசியை போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.பொடி ரவை பதத்துக்கு நீர்த்தார் போல் அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அதன் பின் உளுந்தை போட்டு நன்கு அரைத்து கொள்ளவும்.

நன்கு அரைந்ததும் அதில் தேவையான உப்பு போட்டு,அரைத்த அரிசி மாவையும் அதில் ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்ததும் கிரைண்டரை விட்டு,மாவை அள்ளி எடுத்து வைத்துக் கொள்ளவும்.




பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு ஒன்று சேர கிளறி விட்டு,தோசை கல்லை சூடுபடுத்தி அதில் மொத்தமாகவோ மெல்லியதாகவோ தோசை போல் வார்த்து சுற்றியும் நெய் ஊற்றி ஆப்ப முடியை போல் போட்டு மூடி சிவக்க வேக விடவும்.இருபக்கமும் சிவக்க சுட்டு எடுத்து தேங்காய்,பூண்டு சட்னியுடன் பறிமாறவும்.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்ற சத்தான சிற்றுண்டியாகும்.

குறிப்பு;))
இதில் முட்டை சேர்க்காமலும் சுடலாம்.ப்ரவுன் ரைஸ் இல்லையென்றால் நார்மலாக இட்லி மாவுக்கு பயன்படுத்தும் புழுங்கல் அரிசியையே பயன்படுத்தலாம்.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out