Monday, March 11, 2013

எனது மாமியாரின் கைவண்ணம்

இங்கு எங்கள் வீட்டில் அலங்கரிக்கும் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் எனது மாமியார் அவர்கள்தான்.அதிலும் கைவேலைபாடுகளில் அவரின் ஆர்வத்தை ஏற்கனவே நான் முன்பு உள்ள எங்கள் வீட்டு கைவண்ணம் பகுதியில் சொல்லியிருக்கின்றேன்.இப்பொழுது சிங்கப்பூரில் வீட்டில் பொழுதை போக்குவதற்க்கு இது அவருக்கு கைகொடுக்கின்றது.
நாம் பொருட்கள் வாங்கி வரும் கலர் கலர் பாலீதின் பைகளைக் கொண்டு பல வண்ணப்பூக்களையும்,உடைந்து போன மக்குகளை கொண்டு பூச்சாடிகளையும் செய்து அலங்கரித்து வீட்டில் வைத்து அழகுப்படுத்தியுள்ளார்.இதோ அவற்றில் சில....


ஒரு சில பூக்களை கொண்டு பூங்கொத்துகளாக சுவரை அலங்கரித்தவண்ணம் ஆங்காங்கே வைத்துள்ளார்.அவற்றில் சில இதோ பார்வைக்கு.....



இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இதில் எந்த ஒரு பொருளுமே இதற்க்காக என  வாங்கியது இல்லை.இலைகளுக்கு பாத்திரம் துலக்க நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரையும்,பூக்களுக்கு வண்ண பாலீதின் பைகளும்,சில வண்ண அட்டைகளும் தான்.இவை எல்லாமே நாம் வேண்டாம் என தூர போடும் பொருட்களை சேர்ந்தவையே.... அவற்றை கொண்டு எங்கள் வீடு அலங்கரித்தவண்ணம் இருக்கின்றார் எனது மாமியார்.
இந்த வயதிலும் அதிக ஆர்வத்தோடு செயல்படுவது என்பது பெருமையோடு பாராட்டுக்குரியதாகும்.






Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out