Saturday, March 8, 2014

குவே

இந்த குவே... தமிழ்நாட்டின் நாகை மாவட்டத்தில் காரைக்கால்,நாகப்பட்டினம் ஊர்களில் எந்த ஒரு விஷேச,பண்டிகையானாலும் இந்த இனிப்பு வகை இடம்பெற்றிருக்கும்.

இது நம் தமிழ்நாட்டு குறிப்பு என்றுதான் ரொம்ப நாளாக நினைத்திருந்தேன்.ஏனென்றால் நான் முதன்முதலில் சாப்பிட்டு பார்த்ததும் எங்கள் ஊர் பெண் வீட்டில் தான்.அவர் சொல்லிதான் நான் முதன் முதலில் செய்தேன்.
இங்கே சிங்கப்பூர் வந்த பிறகுதான் தெரிய வந்தது இது மலாய் மக்களின் பாரம்பர்ய இனிப்பு வகை என்று.ஆம் அவர்கள்தான் வீட்டின் சின்ன விஷேசம் முதல் திருமண நிகழ்ச்சி ஆனாலும் எத்தனை வகை உணவுகள் இருப்பினும் இந்த இனிப்பு இல்லாமல் இருப்பதில்லை.அவ்வளவு கலர் கலராக வகைப்படுத்தி வைப்பார்கள்.இதில் சீனிக்கு பதிலாக கருப்பட்டியை சேர்த்து செய்வார்கள் அது ஒரே கலராக அது ஒரு வகையாக வைக்கப்பட்டிருக்கும்.கிழங்கு வகைகளை சேர்த்தும் சேர்த்தும் அது ஒரு வகையாக செய்வார்கள்.இங்கு நிறைய இனிப்புகள் விற்க்கும் கடைகளிலும் கிடைக்கும்.அவ்வளவு பெயர் பெற்றதாகும்.அது அப்படியே இங்கு பல வருடக்கணக்காக வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழர்களிடமும் பரவிவிட்டது  என்றுதான் சொல்ல வேண்டும்.சரி இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.

                        குவே
தேவையான பொருட்கள்
அரிசிமாவு       - ஒரு கப்
சீனீ              - 1 ½ கப்
கெட்டியான தேங்காய் பால்  - 2 கப்
டவுன் பாண்டன் இலை  -  1 (அல்லது)
ஏலக்காய்          - 3 (ஆனால் ஏலக்காய் அவர்கள் சேர்ப்பதில்லை)
சோம்பு            - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர்ஸ்       - விருப்பமான                         கலர்(ஆரஞ்சு,பச்சை,ரோஸ்)       
செய்முறை

முதலில் சீனியை ஒரு பாத்திரத்தில் போட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் சோம்பு,பாண்டன் இலை அல்லது ஏலக்காயை சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.சீனி நன்கு கரைந்து இரண்டு நிமிடம் கொதித்தால் போதுமானது.அதை இறக்கி நன்கு ஆற விடவும்.
மற்றொரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதில் தேங்காய்பால் சேர்த்து,அத்துடன் இந்த சீனி கரைசலையும் வடிக்கட்டி சேர்த்து நன்கு கட்டியில்லாமல் நீர்க்க கரைக்க வேண்டும்.கெட்டியாக இருந்தால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.பிறகு அதை மாவு சல்லடை அல்லது வடித்தட்டில் வடிக்கட்டி கொள்ளவும்.
இப்போது இதை நான்கு சரிசமமாக கப்களில் எடுத்துக் கொண்டு மூன்று கப்களில் நாம் தனியே கலர்களை நன்கு கலந்து விடவும்.
ஒரு ரைஸ் குக்கர் பாத்திரத்திலோ அல்லது இட்லி அவிக்கும் பாத்திரத்திலோ உள்ளே 3 இன்ச் உயர அளவு வட்ட பாத்திரத்தினை (ஒரு பாத்திர ஸ்டாண்ட் மேலே)வைத்தால் அதில் ஒரு இன்ச் அளவிற்க்கு தண்ணீர் தொடும் படி ஊற்றவும்.அதை சூடு படுத்தவும்.
இனி அந்த வட்ட பாத்திரத்தில் சிறிது நெய் தடவிக்கொண்டு முதலில் பச்சைக்கலர் ஒரு பெரிய குழிக்கரண்டி அளவு எடுத்து ஊற்றவும்.மிகவும் மெல்லிய லேயராக இருந்தால் தான் சீக்கிரம் சீக்கிரம் வேக வைத்து எடுக்க வசதியாக இருக்கும்.

அதை அந்த கொதிக்கும் நீரில் வைத்து மூடியில் ஒரு கர்ச்சீப் அல்லது துணியை கட்டி மூடி ஐந்து நிமிடம் வேக விடவும்.(வட்டிலாப்பம் வேக விடுவது போல்)
அதன் பிறகு மூடியை திறந்து பார்த்து விரலால் தொட்டு பார்த்தால் வெந்தும் அதே சமையம் லேசாக பிசுபிசுப்பாக இருக்கும்.இப்போது அடுத்த கலரை அதே அளவு எடுத்து மெதுவாக வெந்திருக்கும் அந்த லேயரின் மேலேயே ஊற்றி அதே போல் ஐந்து நிமிடம் வேக விடவும்.இதே போல் எல்லா கலரையும் ஒன்றன் மேல் ஒன்றாக மாற்றி ஊற்றி வேக விடவும்.இடையிடையே வேகும் அளவிற்க்கு தண்ணீர் இருக்கிறதா என பார்த்து ஊற்றவும்.கடைசி கரைசலை ஊற்றிய பிறகு பத்து நிமிடம் வேகவிட்டு பின்பு அடுப்பை அணைக்கவும்.

பிறகு அந்த பாத்திரத்தை மெதுவாக வெளியே எடுத்து வைத்து ஆறவிடவும்.வேண்டுமானால் சூடு சிறிது குறைந்ததும் குளிர்சாதன பெட்டியிலும் அரை மணிநேரம் வைத்து எடுக்கலாம்.ஆறியதை ஒரு தாம்புலத்தில் தலைகீழ் கவிழ்த்து லேசாக தட்டினால் அப்படியே பாத்திரத்தை விட்டு விழுந்து விடவும்.கத்தியில் சிறிது நெய் தடவி கொண்டு,அதை விரும்பிய வடிவில் துண்டு போடலாம்.

சுவையான வண்ணமிகு குவே தயார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆவியில் வேக வைப்பதாலும் எண்ணெய் நெய் வஸ்துகள் இல்லாததாலும் உடலுக்கு எந்த கெடுதலும் ஏற்படுத்தாது….
குறிப்பு:- )))
இதில் பாரம்பரிய செய்முறை என பார்த்தால் பச்சரிசியை கழுவி 4 மணிநேரம் ஊறவைத்து கிரைண்டரில் மைய நைசாக அரைத்து அதன் பிறகு மற்றவற்றை அதில் கலந்து அதே போல் வடிக்கட்டி செய்வார்கள்.நான் மாவிலும் செய்து பார்த்து அதுவும் நன்றாக வரவே உங்களுக்கு அந்த  ஈஸியான முறையை செய்து காண்பித்திருக்கின்றேன்.இதில் மற்றொரு முறையையும் விரைவில் செய்து எனது பக்கத்தில் சேர்க்கிறேன்.


2 comments:

Jaleela Kamal said...

மிக அருமையான மலாய் நாட்டு பாரம்பரிய இனிப்பு வகை. பார்க்கவே ரொம்ப சூப்பராக இருக்கிறது அப்சரா

Jaleela Kamal said...

மிக அருமையான மலாய் நாட்டு பாரம்பரிய இனிப்பு வகை. பார்க்கவே ரொம்ப சூப்பராக இருக்கிறது அப்சரா

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out