Friday, August 3, 2012

சிறப்பு மிக்க ரமலான்

இவ்வுலக மக்கள் நம் அனைவர் மீதும் இறவனின் சாந்தியும்,சமாதானாமும் நிலவட்டுமாக....

வலைப்பூ சகோதர சகோதரிகளே,,, எப்படியிருக்கீங்க பா.....

நான் எனது பக்கத்திற்க்கு பதிவு போட்டும்,மற்றவர்கள் பக்கத்திற்க்கு வந்து பார்வையிட்டு பதில் அனுப்பியும் பல நாட்கள் ஆச்சு.... மன்னிக்கவும்.அதற்க்காக என்னை யாரும் மறந்திருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.அடடே நான் சொல்ல மறந்துட்டேனே....





எல்லோருக்கும் சிறப்பான ரமலான் வாழ்த்துக்கள்.... (இவ்வளவு லேட்டாவா சொல்றதுன்னு யாரும் முறைக்காதீங்கப்பா ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்)

இன்றோடு ரமலானின் பதினான்காவது நாள் ஓடிக் கொண்டிருக்கின்றது.இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு மிகவும் சிறப்பாகவே போய் கொண்டிருக்கும் என்றே நினைக்கிறேன்.மற்ற சகோதர,சகோதரிகளும் அருகில் இஸ்லாமிய நண்பர்கள் இருந்தால் இஃப்தார் நேரங்களில் கலந்து கொள்ளலாமே...அதுவும் மிகவும் சிறப்பாகவே இருக்கும்.நான் துபாயில் இருக்கும் போது எனது தோழிகள் இரண்டு குடும்பத்தினர் விரும்பி வந்து கலந்து கொள்வார்கள்.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்.இந்த இரண்டு வருடங்களாக நான் அதை மிகவும் மிஸ் பண்ணுகிறேன்.அரபு நாடுகளில் இந்த ரமலான் மாதத்தில் ஒரு தனி சிறப்புதான்...இஃப்தார் நேரங்களில் பள்ளிகளில் அதிக விஷேஷமாக இருக்கும்.அந்த நேரத்தில் டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டிருந்தாலும் கூட அங்கே சில பேர் தேடி வந்து ஒரு பாட்டில் தண்ணீரும்,பேரிச்சைபழமும்,அத்துடன் ஏதேனும் பசியாற்றும் திண்பண்டமும் வைத்த பேக்கை தந்து விட்டு செல்வார்கள்.எல்லா பள்ளிகளிலும் இதே போல் மிகவும் அழகிய முறையில் தொழுகை நடக்கும்.பெண்களுக்கென்ற தனி இடம் எல்லா பள்ளிகளிலும் அழகிய முறையில் அமைத்திருப்பார்கள்.அங்கு நான் இருந்த நாட்கள் மிகவும் அழகிய அனுபவம் வாய்ந்தது.

இங்கு நம் பிறந்த ஊரில் ரமலான் நாட்கள் அது ஒரு வித பாணியில் செல்லும்.கூட்டு குடும்பமாக இருக்கும் வீடுகளில் இஃப்தார் நேரமானாலும் சரி,இரவு நேர தொழுகையானாலும் சரி ஒன்று சேர செயல்படுவது என்பது மிகவும் சிறப்பானதாக இருக்கும்.நம்மோடு நம் குழந்தைகளுக்கு அது மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும்.எனவே நாம் ஒவ்வொருவரும் இந்த மாதத்தை அழகிய முறையில் ஒவ்வொரு நாட்களையும் சிறப்பானதாக ஆக்கிக் கொள்வோம்.

இறைவனின் நாட்டத்தோடு நம் அனைவருக்கும் இந்த மாதம் முழுவதும் நல்லபடியாக அமைந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக ஈத் பெருநாளை கொண்டாடுவோமாக....






2 comments:

Unknown said...

hi dear, Inviting you to join my event " Party snacks",more detais : http://en-iniyaillam.blogspot.co.uk/2012/08/party-snacks-event-announcement.html

Asiya Omar said...

eppadi irukkeenga apsara? nalama?

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out