Sunday, December 4, 2011

மார்க்க கேள்வி-பதில்கள்










இஸ்லாம் மார்க்கம் போன்ற ஒர் எளிய மார்க்கம் ஏதும் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே... ஆனாலும் அதில் நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன... நாமறிந்து கொள்வதோடு அல்லாமல் நம் பிள்ளைகளுக்கும் சொல்லிகொடுத்து அவர்கள் மனதில் ஆழமாய் பதிய வைக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.... அதை மனதிற்க் கொண்டே எனது மைத்துனர் வழக்கம்போல் எங்கள் ஊர்களில் நடக்கும் பெருநாள் போட்டியில் இந்த வருடம் மார்க்க வினா விடை என்ற ஒரு பகுதியையும் இணைத்தார்.அதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை  யார் வேண்டுமாயினும் கலந்துக் கொண்டு தங்களுக்கு தெரிந்தவைகளுக்கு விளக்கம் அளிக்கலாம் என்று ஒரு ஐம்பது கேள்விகளை தயார் நிலையில் அச்சிட்டு முன்னதாகவே எல்லோருக்கு அளித்து விட்டார்.
அதில் கலந்து பெரும்பாலும் பதில் அளீப்பவர்களுக்கு சில நூறு தொகைகள் பரிசாக தானே வழங்குவதாகவும் அறிவித்தார்.அதே போன்று மிகவும் சிறப்பாக நடத்தினார். அவை எல்லாமே மிகவும் முக்கியமான அறிந்து கொள்ள வேண்டிய கேள்வி பதில்கள்.அவரும்,அவர் மனைவியும் (அவர் ஒரு முஹல்லிமா)சேர்ந்தே குரான்,ஹதீஸை கொண்டு தயார் படுத்தியது.
அவற்றில் பாகம்-1 ஆக பாதியை தருகின்றேன்.இதை நாம் நம் வீட்டிலேயே ஒருவரையொருவர் கேட்டு தெரியப்படுத்திக் கொள்ளலாம்.தெரிந்தவர்களுக்கு இது சின்ன விஷயம்... தெரியாதவர்களுக்கு இது அறிய வேண்டிய விஷயம் இல்லையா....?







Q1) குர்ஆன் என்பதற்கு என்ன பொருள்?
A) ஓதுதல்! (that which is recited; or that which is dictated in memory form)

Q2) குர்ஆன் யாரால் அருளப்பட்டது?
A) அகிலங்கள் அனைத்தையும் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்டது

Q3) குர்ஆன் எந்த இரவில் அருளப்பட்டது?
A) லைலத்துல் கத்ர் இரவில்

Q4) குர்ஆன் யார் மூலமாக அருளப்பட்டது
A) கண்ணியமிக்க வானவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களின் மூலமாக.

Q5) குர்ஆன் எந்த தூதருக்கு அருளப்பட்டது?
A) இறுதி தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு.

Q6) முதன் முதலாக குர்ஆன் எந்த இடத்தில் வைத்து அருளப்பட்டது?
A) மக்காவிலுள்ள ஹிரா குகையில் அருளப்பட்டது

Q7) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டது?
A) அபூபக்கர் (ரலி) அவர்களின்ஆட்சிக்காலத்தில்

Q8) எந்த கலிபாவின் ஆட்சிக் காலத்தில் குர்ஆன் முதன் முதலாகபிரதியெடுக்கப்பட்டது?
A) உதுமான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்.

Q9) கலிபா உதுமான் அவர்களின் காலத்தில் பிரதியெடுக்கப்பட்ட குர்ஆன் தற்போதுஎங்கிருக்கிறது?
A) ஒன்று தாஸ்கண்டிலும், மற்றொன்று துர்கியின் இஸ்தான்புல் அருங்காட்சியகத்தில்உள்ளது.

Q10) அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அந்தஸ்து உடையவர்கள் யார் என குர்ஆன்கூறுகிறது?
A) தக்வா (இறையச்சம்) உடையவர்கள்

Q11) குர்ஆனில் மிகப்பெரிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் பகரா (இரண்டாவது அத்தியாயம்)

Q13) குர்ஆனில் மிகச் சிறிய அத்தியாயம் எது?
A) சூரத்துல் கவ்ஸர் (108 வது அத்தியாயம்)

Q14) குர்ஆனை பாதுகாப்பது யார் பொறுப்பில் உள்ளது?
A) அதை இறக்கிய இறைவனே அதன் பாதுகாவலன் ஆவான்.

Q15) நபி (ஸல்) அவர்களின் எத்தனையாவது வயதில் முதன் முதலாக குர்ஆன்அருளப்பட்டது?
A) 40 ஆவது வயதில்

Q16) குர்ஆனுக்கு இருக்கும் மற்ற பெயர்களில் சிலவற்றைக் கூறுக:
A) அல்-ஃபுர்கான், அல்-கிதாப், அத்-திக்ர், அல்-நூர், அல்-ஹூதா

Q17) இறைவன் நம்மோடு இருக்கிறான் என கூறிய நபி யார்?
A) முஹம்மது (ஸல்) அத் தவ்பா(9:40)

Q18) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியுமா?
A) ஜின்களுக்கு மறைவான விஷயங்கள் தெரியாது. அஸ் ஸபா(34:14) மற்றும் அல்ஜின்னு(72:10)

Q19) குர்ஆனில் மூன்றில் ஒரு பகுதி என சிறப்பித்துக் கூறப்பட்ட சூரா எது?
A) சூரத்துல் இக்லாஸ் (112 வது அத்தியாயம்)

Q20) குர்ஆனில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கிறது?
A) 114 அத்தியாயங்கள்

Q21) நபி முஸா (அலை) அவர்களோடு இறைவன் பேசிய பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
A) துவா பள்ளத்தாக்கு. அந் நாஜிஆத்(79:16), தாஹா(20:12). இது தூர் மலையின் அடிவாரத்தில்உள்ளது. (19:52)

Q22) அல்-குர்ஆனை மனனம் செய்த முதல் மனிதர் யார்?
A) முஹம்மது நபி (ஸல்) அவர்கள்

Q23) நபி (ஸல்) அவர்களின் பெயர்கள் குர்ஆனில் எத்தனை முறை இடம் பெற்றுள்ளது?
A) முஹம்மது (ஸல்) என நான்கு முறையும், அஹ்மது என ஒரு முறையும் இடம்பெற்றுள்ளது.

Q24) இறைவனை வணங்குவதற்காக கட்டப்பட்ட முதல் இறையில்லம் எது எனகுர்ஆன் கூறுகிறது?
A) கஃபா

Q25) எதிர்கால சந்ததியினருக்கு அத்தாட்சியாக விட்டு வைக்கப்பட்டுள்ளவற்றில்இரண்டைக் கூறுக:
A) நூஹ் (அலை) அவர்களின் கப்பல் (54:15), மற்றும் பிர்அவ்னின் உடல் (10:92)

இன்ஷா அல்லாஹ் இதன் பாகம்-2 ஆக மற்ற கேள்விகளை தருகின்றேன்.


குறிப்பு:-)))முஹர்ரம் மாதத்தின் சிறப்பாக இந்த சிறு முயற்ச்சி.இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளே...ஆஷூரா நோன்பு பிடுத்து விட்டீர்களா...?

எல்லாவற்றிற்க்கும் அல்லாஹ் போதுமானவன். 





5 comments:

இப்னு அப்துல் ரஜாக் said...

superb akka

moosa shahib said...

வணக்கம்..

பல புதிய ஃபேஷன் நகைகள் அறிமுகம் செய்து இருக்கிறோம்.. பார்க்க வாருங்கள்.. மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்

அன்புடன்
http://newjanatha-fancyjewellery.blogspot.com/

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும் பல தெரியா கேள்விகளுக்கும் விடை தெரிந்துக்கொண்டேன்.. நன்றி.. குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளது...

அ. ஹாஜாமைதீன் said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
மிக நல்லப் பதிவு, நிச்சயமாக தெரியாதவர்களுக்கு இது அறிய வேண்டிய விசயம், இன்ஷா அல்லாஹ் இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுங்கள்.

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ் ...

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out