Showing posts with label ரமலான் ஸ்பெஷல். Show all posts
Showing posts with label ரமலான் ஸ்பெஷல். Show all posts

Saturday, July 13, 2013

ஜெல்லி லெயர் கேக்

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இந்த வலைப்பூவை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ரமலான் மாதம் சிறப்பிற்கான வாழ்த்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதம் நம் எல்லோர்க்கும் சிறப்பானதாக அமையவேண்டுமெனவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

இந்த மாதத்தில் எனது இல்லத்தில் இஃப்தாரில் செய்யும் ஒரு சில குறிப்புகளை இங்கே அவ்வபோது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.ஏதேனும் புதுவிதமான குறிப்புகளை செய்து பார்ப்பதும் உண்டு.அப்படி இந்த வருடம் இந்த ஜெல்லி லேயர் கேக்கினை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு பிடித்திருந்தது.அதை எனது இல்லத்தில் முதலாவதாக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.வாங்க செய்முறையை பார்ப்போம்....

                                                       ஜெல்லி லேயர் கேக்



தேவையான பொருட்கள்

அகர் அகர் (அ) ஜெல்லி மிக்ஸ்  -  ஒரு ஸ்பூன்(ரெட் கலர்)
கண்டன்ஸ்ட் மில்க்                        -  கால் கப்
ஜெலட்டின்                                         -   1 1/4 ஸ்பூன்
அன் சால்ட்டட் பட்டர்                    -   20 கிராம்
மேரி பிஸ்கட்                                     -   5
தேவைப்பட்டால் சீனி                    -   3 ஸ்பூன்

செய்முறை

மேரி பிஸ்கட்டை ஒரு பாலிதீன் கவரின் உள்ளே வைத்து ஒரு சப்பாத்தி கட்டையால் நொருக்கி கொள்ளவும்.
ஒரு சதுர அல்லது செவ்வக நான்ஸ்டிக்கோ,கண்ணாடி ட்ரேயையோ எடுத்துக் கொள்ளவும்.அதன் உள்ளே நெய்யோ பட்டரோ தடவி வைத்துக் கொள்ளவும்.

நுணுக்கிய பிஸ்கட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதை அந்த பட்டர் தடவிய ட்ரேயில் பரவலாகவும் சரிசமமாகவும் அழுத்தி வைத்து விட்டு,அதை ப்ரீசரில் 5 நிமிடம் வைக்கவும்.

அதற்க்குள்ளாக ஜெலட்டினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் 4 ஸ்பூன் ஊற்றி நன்கு கரையவிடவும்.நன்கு கரைந்தவுடன்,அதை மில்க்மெய்டோடு நன்கு கலந்துவிடவும்.அதை செட்டான பிஸ்கட் ட்ரேயை எடுத்து அதின் மேல் மெதுவாக ஊற்றவும்.அது பரவலாக ஆனதும் அதையும் ப்ரீசரில் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும்.
அதற்க்குள்ளாக ஜெல்லி மிக்ஸை கொதிக்கும் நீரில் கலந்து நன்கு கரைய விடவும்.அதில் உள்ள இனிப்பு போதவில்லையெனில் கொஞ்சம் கலந்து கொள்ளவும்.நன்கு கரைந்ததும் செட் ஆன ட்ரேயை எடுத்து அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.அதை நார்மலாக ப்ரிட்ஜில் வைத்து விடவும்.குறைந்தது ஒரு மணிநேரம் செட் ஆகவிடவும்.


பிறகு எடுத்து கத்தியால் துண்டு போட்டு அடிவரை நன்கு கீரி மெதுவாக எடுத்து வைக்கவும்.சில்லென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out