Showing posts with label என் குழந்தைகளின் கைவண்ணம்.. Show all posts
Showing posts with label என் குழந்தைகளின் கைவண்ணம்.. Show all posts

Saturday, February 12, 2011

என் குழந்தைகளின் கைவண்ணம்


இந்த காலத்து குழந்தைகள் நம்மைவிட அதிபுத்திசாலிகள்.... எல்லா விஷயங்களையும் கற்று கொள்வதில் மிகுந்த ஆர்வத்தை காட்டுகின்றார்கள்... அதிலும் அவர்களுக்கென்று தனித்து காட்டும் அளவிற்க்கு ஏதேனும் ஒரு விஷயத்தில் அவர்களின் ஆர்வமும்,கவனமும் அதிகம் இருக்கும்.அப்படி என் குழந்தைகளின் ஒரு சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவந்தேன்....

 எனது மூத்த மகனின் பெயர் அர்ஷாத்.... ஒன்பதரை வயதை தொட்டு விட்டான்... நான்காம் வகுப்பை முடிப்பதற்க்கு மும்முரமாக உள்ளான்...
எந்த விஷயத்தையும் துருவி துருவியே கேள்வி கேட்டு தெரிந்து கொள்பவன்.மார்க்கத்தை அறிந்து கொள்ளவும் மிகுந்த நாட்டம் அவனுக்கு.... நிறைய கேட்டு தெரிந்து கொண்டு தன் தம்பி,தங்கைகளுக்கும் சொல்லித்தருவான்.அவனுக்கென்ற மிகுந்த ஆர்வம் உள்ள விஷயம் கிரிக்கெட்.அதனை பற்றி அந்த நிமிஷம் வரை உள்ள செய்திகளை அவனிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.எனக்கு கிரிக்கெட்டில் அவ்வளவாக விருப்பம் இல்லாவிட்டாலும் அவன் சொல்வதற்க்காக கேட்டு கொண்டிருப்பேன்.அதுவும் அவன் டாடி இல்லாதபோதுதான்.டாடி இருந்துட்டா அவங்க ரெண்டு பேரும் பயங்கர டிஸ்கஷனில் இறங்கிடுவாங்க.... என்னை விடுங்கப்பா ஆளை என்று அந்த இடத்தை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவேன்.  

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out