இட்லி _ 3
வெங்காயம் _ 1
முட்டைகோஸ் _ 3 தேக்கரண்டி(அரிந்தது)
கேரட் _ 3 தேக்கரண்டி(அரிந்தது)
சிகப்பு,பச்சை
குடைமிளகாய் } _ 3 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் _ 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை _ 1 கொத்து
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
இட்லியை நன்கு உதிர்த்து வைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கறிவேப்பிலை மற்றும் அரிந்து வைத்திருக்கும் அனைத்து காய்களையும் சேர்த்து சிறிது உப்பு போட்டு நன்கு வதக்கவும்.
பிறகு உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து நன்கு ஒன்று சேர பிரட்டி உப்பு சரி பார்த்து விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கவும்.
விரும்பினால் ஒரு கைய்யளவு முருங்கைகீரையை காய்கள் வதங்கியதும் சேர்த்து ஒரு கிளறு கிளறி மற்றவைகளை சேர்த்து இறக்கலாம்.
இங்கு எனக்கு கிடைக்காததால் சேர்க்க முடியவில்லை.
ஒரே இட்லியாக சாப்பிட்டு போரடிப்பவர்களுக்கு இதே போல் சத்துள்ளதாக சுலபமான முறையில் செய்து தரலாம்.நிச்சயம் ரசித்து சாப்பிடுவார்கள்.
அன்புடன்,
அப்சரா.




