Monday, January 20, 2014

தேங்காய் பால் சாதம்

இது நம் தமிழர் சமையலுக்கான குறிப்பு...
அதுவும் இல்லாமல் இந்த குறிப்பை நீண்ட நாளாக எனது வலைப்பூ இல்லத்தில் போட இருந்த சமையல் குறிப்பாகும்.
ஏனெனில் எங்கள் வீட்டின் ஸ்பெஷல் உணவு வகைகளில் இந்த தேங்காய்பால் சாதம்,மீன் காம்பினேஷன் அனைவரின் விருப்ப சாப்பாடாகும்.இனி இதன் செய்முறையை பார்க்கலாம்.



                               தேங்காய்பால் சாதம்

தேவையான பொருட்கள்

பச்சரிசி (அ) புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
தேங்காய்                                       - 2
பெரிய வெங்காயம்                    -  1
பூண்டு (  முழுதாக )                    -   1
பட்டை                                              -  2 இன்ச் அளவில் 2
ஏலக்காய்                                         -  3
வெந்தயம்                                        -  1 மேசைக்கரண்டி
நெய்                                                    -  3 மேசைக்கரண்டி
புதினா மல்லி தழை                     -  ஒரு கைப்பிடி
கருவேப்பிலை                               -  ஒரு கொத்து

செய்முறை

அரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் வடித்து விட்டு வைக்கவும்.
தேங்காயை உடைத்து அதில் நன்கு தண்ணீர் ஊற்றி இரண்டு மூன்று முறை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.(முதல் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் என...)
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி வைத்துக் கொள்ளவும்.பூண்டை உரித்து விட்டு அம்மியிலோ,குத்துக்கல்லிலோ நசுக்கி வைத்துக் கொள்ளவும்.நைசாக அரைக்க கூடாது.

இப்போது சாதம் செய்யும் பாத்திரத்திலோ,அல்லது ஒன்றரைபடி குக்கரிலோ மூன்று முறையாக எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை எட்டு டம்ளராக அளந்து ஊற்றவும்.தேங்காய் பால் முடிந்து போனால் மீதிய அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.(ஒன்றுக்கு இரண்டு என கணக்கில் அளந்து வைக்க வேண்டும்.) 
அதில் தேவையான அளவு உப்பு,நசுக்கிய பூண்டு,அரிந்த வெங்காயம்,அரிசியை தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து கலக்கி அடுப்பில் வைக்கவும்.
கொதிக்க ஆரம்பிக்க நுரை பொங்க வரும் அந்த சமையத்தில் கழுவி வைத்திருக்கும் அரிசியை போட்டு நன்கு கிளறவும்.
சட்டியில் தம் போடுவதென்றால் தண்ணீர் சுண்டும் நிலையில் தம் போடும் தவாவை அடுப்பில் வைத்து அதன் மேல் இந்த சட்டியை வைத்து தவா சூடேறியது,அடுப்பை மிதமான தீயில் வைத்து விட்டு,மூடியில் அலுமினிய ஃபாயில் போட்டு மூடி மேலே ஏதேனும் வெயிட் வைத்து 15 நிமிடம் விடவும்.
அதன் பிறகு திறந்து பார்த்து கிளறிவிட்டு பார்த்தால் சாதம் வெந்திருக்கும்.உதிரியாகவும் இருக்கும்.அப்போது அடுப்பை அணைத்து விடவும்.
இதே குக்கரில் வைத்தோமேயானால்,இதே போல் அரிசியை போட்டு கிளறிய பின் நன்கு தள தளவென்று கொதிக்கும் போது குக்கரை மூடி விடவேண்டும்.
நன்கு ஸ்டீம் வரும் போது வெயிட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் வைத்து 8 நிமிடம் கழித்து இறக்கவும்.ஸ்டீம் விட்டதும்,மூடியை திறந்து ஒரு முறை அடியிலிருந்து கிளறிவிட்டு வைத்தோமேயானால் சாதம் உதிரியாக இருக்கும்.


இத்தோடு மீன்குழம்பும்,மீன் பொறித்தும்,ஒரு கீரை அல்லது ஏதேனும் காய் கூட்டோ வைத்து அப்பளமும் சேர்த்து சாப்பிட்டோமேயானால் சாப்பாடு செல்வதே தெரியாது.அவ்வளவு ருசியாக இருக்கும்.
கோழி,கறி குழம்பும் நன்றாகவே இருக்கும்.சைவம் எனில் பாசி பருப்பு சாம்பார் புளி அல்லது புதினா துவையல் காம்பினேஷன் அப்படியே அள்ளும்.


4 comments:

nandoos kitchen said...

Thenga pal sadam looks yumm. First time here. Very happy to follow you. Do visit my space if you find time and leave your valuable comments.

On-going event: South Indian cooking

Asiya Omar said...

சூப்பர், வெந்தயம் சேர்ப்பது புதுச்சாக இருக்கு,பரிமாறல் ஆஹா !

சாரதா சமையல் said...

thengaipal satham supera irukku!!!

M SUSMA said...

Thengai paal sadham yummy!!!!!

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out