Monday, March 21, 2011

வெங்காய அடை


*** தேவையான பொருட்கள் ***
பச்சரிசி             _    ஒரு டம்ளர்
முட்டை            _    ஒன்று
சோம்பு             _    ஒரு ஸ்பூன்
தேங்காய்த்துருவல்   _    கால் கப்
சின்னவெங்காயம்    _    15
பச்சைமிளகாய்      _    ஒன்று
சீனீ                _    ஒரு ஸ்பூன்
சமையல் சோடா உப்பு _    2 சிட்டிகை
நெய் (அல்லது)எண்ணெய் _     சுடுவதற்க்கு
உப்பு                    _    தேவையான அளவு

*** செய்முறை ***

தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை நன்கு கழுவி விட்டு கால் மணிநேரம் ஊற வைத்து,பின்பு தண்ணீர் இல்லாமல் வடிக்கவும்.
ஒரு வெள்ளைத்துணியிலோ,மரவையிலோ பரவலாக தடவி விட்டு நன்கு உலரவிடவும்.

நன்கு உலர்ந்ததும்,சோம்பு சேர்த்து மிக்ஸியில் ரவைக்கும் கொஞ்சம் பெரியதாக  பொடித்துக் கொள்ளவும்.
பிறகு தேங்காய் துருவலை ஒரு சுற்று ஓடவிட்டு பின் உரித்து கழுவி வைத்திருக்கும் வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

பொடித்த அரிசியுடன் அரைத்தவை,சீனீ,உப்பு,சோடா உப்பு மற்றும் முட்டை உடைத்து ஊற்றி நன்கு பிணைந்து கொள்ளவும்.(அரைத்த விழுதின் தண்ணீரே போதுமானது.இல்லையெனில் கொஞ்சமாக தண்ணீர் தெளிக்க வேண்டும்)

பத்து நிமிடம் கழித்து தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும் நெய் ஒரு ஸ்பூன் நிறைய ஊற்றி பின் கை நிறைய மாவை உருட்டினாற்போல் எடுத்து அடையாக அரை இன்ச் அளவு தட்டவும்.

மிதமான தீயிலேயே வேக விடவும்.அடி சிவந்ததும் மெதுவாக திருப்பி விட்டு ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வேக விடவும்.நன்கு பரவலாக சிவந்ததும் எடுத்து விடவும்.
மாலை நேரத்தில் சுடசுட சாப்பிட மொறு மொறுவென்று மிகவும் நன்றாக இருக்கும்.

பாதி நெய் பாதி தேங்காய் எண்ணெய் என கலந்து சுட்டால் அடை நல்ல மணமாக இருக்கும்.கறி,கோழி குழம்பிலும் இதை தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out